Monday, 28 November 2016

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் வாழும் மிகப் பெரிய விஞ்ஞானிகள் எனக் கூறப்படும் பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கின், நோம் சோமஸ்கி, எலன் மாஸ்க், மற்றும் ஸ்டீவ் வொஸ்னியேக் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கொடூரமான ரோபோக்களை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் மிகவும் குறுகிய காலத்தில் முழு மனித இனத்தையும் அழிக்கும் திறன் இந்த ரோபோக்களிடம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் பல நாடுகள் போர் நடவடிக்கைகளுக்காகவும் பாலியல் தேவைகளுக்காகவும் ரோபோக்களை உருவாக்கி வருகின்றன.
உலகின் பாதுகாப்பு மாத்திரமல்லாது நாகாரீகத்தின் எஞ்சிய பகுதிகளும் இதனால், அழியும் ஆபத்து இருப்பதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்யா ஏற்கனவே தனது கண்ணுக்கு புலப்படும் அனைத்தையும் சுட்டுக்கொல்லும் நோக்கில் ரோபோ இயந்திரம் ஒன்றை தயாரித்துள்து.
மனிதனின் சில செயற்பாடுகaள் திரைப்படங்களில் உச்சக்கட்ட இறுதி காட்சிகளில் வரும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் போல் மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் நிலைமையாக மாற வழிவகுக்கலாம் என்பது நிச்சயமானது
இந்த தகவல் வேதாகம தீர்க்கதரிசனம் விரைவில் நிறைவேற இருக்கிறது என்பதை காட்டுகிறது  இதோ அதற்கான வசனம் 
 வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்



15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
Share:
Read More

Saturday, 26 November 2016

ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய அரசு

ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய அரசு
Share:
Read More

Friday, 25 November 2016

Wednesday, 23 November 2016

500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்காக?

500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்காக?
Share:
Read More

தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONALD TRUMP PRESIDENT OF USA TAMIL

தேவன் தனது தீர்க்கதரிசி வாயிலாக கூறியதை நிறைவேற்றினார். Donald J. டிரம்ப்பை  வெற்றி  பெற செய்தார் அமெரிக்காவை வன்முறை மூலம் சுத்திகரிப்பர் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் 
Share:
Read More

வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்

வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்
Share:
Read More

Wednesday, 16 November 2016

தமிழ் உலகின் பழமையான மொழி

’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Share:
Read More

Wednesday, 9 November 2016

தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார்


தேவன் தனது தீர்க்கதரிசி வாயிலாக கூறியதை நிறைவேற்றினார். Donald J. டிரம்ப்பை  வெற்றி  பெற செய்தார் அமெரிக்காவை வன்முறை மூலம் சுத்திகரிப்பர் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் 
Share:
Read More

Monday, 7 November 2016

புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு


நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம் தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம் முதல் சிகரட் இலவசமாக ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான் தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி செய்வதால் நண்பர்கள் எங்கே வெறுத்து விடுவார்கள் என்று பயந்து புகைபிடிக்க தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.புகைப்பிடித்தலை கூடிய விரைவில் கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ? எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்
Share:
Read More

Sunday, 6 November 2016

பாஸ்வேர்ட் திருடர்கள் ?

பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர்.
இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை வைத்து தவறு இழைக்க எளிதாக போய் விடுகிறது.
ஏன் இப்படி எளிதான பாஸ்வேர்டுகளை வைத்து தவறு செய்பவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும் என கணினி வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படி மோசடி செய்பவர்கள் எளிதான பாஸ்வேர்டுகளை வைத்துள்ள சாதாரண மனிதர்களின் 73 சதவீத கணினி கணக்குகளை கண்டுபிடித்து விடுவதாக கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிரபல நிறுவனமான Yahoo கூறுகையில், வயது, abc123, 123456, Welcome, Sunshine, password, princess போன்றவைகளையே பலர் பொதுவான பாஸ்வேர்டுகளாக பயன்படுவதாக கூறியுள்ளது.
இந்த இணைய மோசடி மன்னர்களிடம் இருந்து தப்பிக்க நல்ல கடினமான பாஸ்வேர்டுகளை மக்கள் உபயோகபடுத்துவதே எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் என்பது கணினி வல்லுனர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
Share:
Read More

Popular Posts

Blog Archive